இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல
பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக,
நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக,
பனி மலையாக என இயற்கை
பல்வேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும்.
இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை
வருடி, பின்பு மெல்ல நம்மை
தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.
இந்த நீரும் மலைகளும் ஒரே மாதிரியான தன்மைகள்
உடையவை. கிடைக்கும் இடத்திற்கேற்றவாறு தன் உருவத்தையும், அழகையையும் மாற்றிக் கொண்டே
இருக்கும். அதே சமயம் குளிர்ச்சியாகவும் இருக்கும். இரண்டும் சேர்ந்தே பயணிக்கக் கூடியவை.
அந்த இரண்டும் கண்களில்பட்டது இனிமையானவை.



